தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை

 


எதிர்வரும் 5 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் அருணாசல பிரதேசத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளது. மேலும், நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு நாளில் அருணாசல பிரதேசம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இது 7 செ.மீ முதல் 11 செ.மீ வரை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, வரும் நாட்களில் நாடு முழுவதும் புதிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த வாரத்தில் வடகிழக்கு இந்தியாவில் இரண்டு முறை மேற்கு திசை காற்று மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும். ஏப்.7-ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அருணாசல பிரதேசம்- ஏப்ரல் 5, 6, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

அசாம் மற்றும் மேகாலயா- ஏப்ரல் 7, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹி, கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், ராயலசீமா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா. குறிப்பாக ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா, ஏனாம், கேரளா மற்றும் மாஹி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post